நள்ளிரவு காற்று...
விஷ்ணுபுரம் சரவணன்
Friday, October 30, 2009
உலகம[யம]றியா சோடா ராமு
ராமு என்று கூப்பிட்டால் அவர் திரும்பிபார்க்கமாட்டார். 'சோடா'ராமு என கூப்பிட்டு முடிக்குமுன்னே ,"என்னா?" என்பார். அந்தளவு அவரேயறியாமல் அவரோடு சோடா ஒட்டிக்கொண்டிருந்தது.
சோடா ராமுக்கு ஆன்மீகத்தின் நீளம் அகலமெல்லாம் தெரியாது. ஆனாலும் தனது சோடா கம்பெனிக்கு எதிரேயுள்ள மாரியம்மன் கோயில் உண்டியல் மேல் நேற்றைய பகதர்கள் கொட்டி போயிருக்கும் குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்ட பின்னரே அன்றைய வேலையை துவங்குவார். மருதவஞ்சேரி, கடகம்பாடி, நல்லிச்சேரி, கூந்தலூர்.. என லையனுக்கு தனித்தனியே சோடா கொண்டுபோகும் ஆட்கள் வருமுன்னே எல்லா பெட்டிகளிலும் சோடா பாட்டிகளை நிரப்பி, வாசலில் கொண்டுவந்து தயாராய் வைத்துமுடிக்கும் போதுதான் சூரியன் சோம்பல் முறிப்பான்.
கடைகளுக்கு சோடா விநியோகிக்கும் இருபது ஆட்களுக்குமான தனித்தனியான கணக்கு நோட்டில் எழுதும்போதே ராமுக்கு இல்ல..இல்ல.. சோடாராமுக்கு பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்திருக்கும். ஆனாலும் அவர்களை லைனுக்கு அனுப்பிவிட்டு மூன்றுகடை தள்ளியுள்ள செல்லக்குட்டி டீக்கடையில் அவர் சாப்பிடுவது எட்டு இட்லிகளும் அன்றைய ராசிபலன்களையும்.
"சூரியன் கண்ணை கூசத்திற்கு முன்னாடி கிளம்பினாதான், நடுமண்டையில அடிகும்போது திரும்பலாம்" என அவர் வழியனுப்பிய அந்த இருபது நபர்களெல்லாம் இப்போது அவரிடம் வேலைக்கு இல்லை. இருபது நபர்களுக்கான வேலையும் அங்கில்லை.அவரும், மனைவி ரத்தினமும், வயதுக்கு வந்த மகள் அமுதாவும், அஞ்சாவது படிக்கிற மகன் பூபதியுமே அவரவருக்கான நேரங்களில் வேலையை பகிர்ந்துக்கொள்கின்றனர். வயலையும், மாடுகளையும் விற்றதில் வீடு கடனிலிருந்து தப்பி நிற்கிறது.
நொடித்துப்போன வியபாரத்திற்கான காரணமாக அவருக்கு உணர்த்தப்பட்டிருப்பது மகன் பூபதியின் பிறந்த யோகம்[!]தானாம். அவன் பிறந்த ஒரு வாரத்தில் உள்ளூர் ஜோசியர் சமபந்தம் "ராமு.. பையன் ஏழரை நாட்டு சனியில் பொறந்திருக்கான். ஏழரை வருசம் கஷ்டந்தேன். ஆனா அதுக்கு அடுத்த வருசமே ராஜயோகம் கூடிவரும். கைநழுவியதெல்லாம் ரெட்டிப்பா வந்துச்சேரும்" என தனது தொடையில் அடித்து சொல்லியிருந்தார். பூபதிக்கு பத்து வயதாகியும் இன்னமும் கை நழுவிக்கொண்டேதானுள்ளது.
சைக்கிள் கேரியரில் இறுக்கமாய் பெட்டியை கட்டிவந்து, இரவாஞ்சேரி சங்கர் கடையில் நிறுத்தியது,
" சோடா மட்டும் ஆறு போதும் ராமு"
" ஏண்ணே கலரே எங்கிட்ட வாங்க மாட்றீங்க..கலர் ஓடறதில்லியா?""
" அதெல்லாம் டவுண்லேர்ந்து வர கலர்தான் ஓடுது..
அதுல மட்டும் என்ன இருக்கோ என மனதிற்குள் சொல்லிக்கொண்டே, சோடா வை இறக்கிய ராமு அந்த பெப்ஸியை வெறித்ததை பார்த்த சங்கர்,
" டவுண் கலர் ஒன்ன குடிச்சி பாக்கிறியா ராமு"எனக்கேட்டபோது,ராமுவுக்கும் குடிக்க ஆசையிருந்தாலும் அந்த காசுக்கு ரேசனில் 10 கிலோ அரிசி வாங்கிடலாமென்பதால்..
" அதெல்லாம் வேணா சங்கரு.. என இழுக்க.. " காசெல்லாம் வேணாம்..ஏஞ்செலவா இருக்கட்டும் குடி..என சொல்லிக்கொண்டே பெப்ஸி ஒன்றை திறந்து தர, அதனை மடக்,மடக்கென குடித்துக்கொண்டே, " சுர்ருன்னு..நல்லாத்தேன் இருக்கு" என்றார் சோடா ராமு வெள்ளந்தியாய்.
அவருக்கு உலகமயமாக்கல், தனியார்மயமெல்லாம் என்கிற வார்த்தைகளே தெரியாது .
Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 5:58 AM 8 COMMENTS
links to this post
Saturday, October 3, 2009
கல்யாண்ஜி கடிதம்
என் கவிதை தொகுப்பு குறித்து கல்யாண்ஜியின் கடிதம்
---------------------------------------------------------------------
ஓவியத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச்சி... விஷ்ணுபுரம் சரவணன்
அகரம் வெளியீடு. தஞ்சாவுஉர்
அன்புமிக்க விஷ்ணுபுரம் சரவணன்,
வணக்கம்.
உங்களுடைய கவிதை தொகுப்பும் நீண்ட கடிதமும் கிடைத்தன.
மகிழ்ச்சியும் நன்றியும் வாழ்த்துக்களும்.
***
கரிகாலனின் முன்னுரை அழகாக, சரியான வெளிச்சம் உள்விழும்படி கதவுதிறந்துவிட்டிருக்கிறது. அவர் குறிப்பிட்டிருப்பதுபோல உங்களின் கவிதை உலகம் பெரும்பாலும் குழந்தைகளின் உலகம் சார்ந்திருப்பதை அறியமுடிகிறது. அந்த அக்கறை முக்கியமானதும் கூட. என்னுடைய துணைவியிடம் உங்களுடைய சில கவிதைகளை வாசித்துக்காட்டினேன். 'தலையில் குட்டிக்கொள்கிறாள்...', 'சூடுகாயின் வெப்பம் தாளாத சிறுமியின்...' போன்ற கவிதைகளின் பின்புலத்தைக் குறிப்பிடாத வாசிப்பிலும். கடைசி வரிகளில் நெகிழ்ந்து அசைவற்று விடுவதாயிற்று கேட்ட முகமும் கண்களும்.
13, 40, 41, 43, 61, 65, 66 ம் பக்கக் கவிதைகள் எனக்குப் பிடித்தவை. கரிகாலன் குறிப்பிட்டவையும் இவற்றோடு சேரும். 20, 45, 53, ௬௨ ம் பக்க கவிதைகளைத் தொகுப்பில் தவிர்த்திருக்கலாம் அல்லது வேறுமாதிரி எழுதிப் பார்த்திருக்கலாம்.
***
முகப்போவியம் வரைந்த ஓவியருக்கும், திரு. பொதியவெற்பனுக்கும் என் வணக்கத்தைச் சொல்லுங்கள். தொடர்ந்து வாசித்து வாருங்கள். பாடப்பாட ராகம் என்பார்கள். பாடப்பாட மட்டுமல்லை கேட்க கேட்கக் கூட.
***
மிண்டும் உங்களின் குழந்தைகள் உலக அக்கறைக்கு என் வாழ்த்துக்கள். குழந்தைகள் அருகில் கவிதைக்காககொண்டுபோவதை, குழந்தைகள் அருகில் வேலுசரவணன் போன்ற கலைஞர்களைக் கொண்டுபோவதன் மூலமே சரியாகச் செய்ய முடியும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்த தெரிதல் உங்களின் சிறப்பு.
எல்லோருக்கும் அன்புடன்.
கல்யாண்ஜி.
Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 11:55 PM 5 COMMENTS
links to this post
Tuesday, September 29, 2009
எழுத வந்துகொண்டிருக்கும் கதை..
தனது பதிவெழுத வந்த கதையில் தமிழ்நதி அய்ந்து நண்பர்களை அவர்களின் பதிவெழுத வந்த கதையை எழுத அழைத்திருந்தார். அதில் எனக்கு பரிச்சயமானவர் இசைமட்டுமே. இசையும் அவனின் பதிவை எழுதிவிட்டான் . நான் ஏற்கனவே ரவுடி என பார்ம் ஆகிவிட்டதாலும் அந்த ரவுடி கெட்டப்பை நீட்டிக்க நானும் எழுத துணிந்துவிட்டேன். ஆனாலும் தன்னடக்கமாக அல்ல.. நிஜமாக ஒன்றை சொல்லியே தொடங்க வேண்டும் தமிழ்நதி, இசை இருவரும் தனக்கான துறைகளில் தன்னை நிருபித்து வருபவர்கள். நான் நடைபழகும் குழந்தைபருவத்தன். அதனால்தான் என் பதிவிற்கு தலைப்பாக "" எழுத வந்துகொண்டிருக்கும் கதை'' என வைத்துள்ளேன். இருபுறமும் புத்தகங்களால் சூழ்ந்த தனது வீட்டிலிருக்கும் அறையிலிருந்த கணினியில்தான் நண்பரும் கவிஞருமான மணிசெந்தில் இணையத்தளம் பற்றி எனக்கு அறிமுகம் செய்தார். அதற்கு முன் அவர் ஆர்குட் ல் பல விவாதங்களில் கலந்துகொண்டு பலருக்கும் பரிச்சயமானவர். அன்றுதான் எனக்கான மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆர்குட் ல் இணைவது என அவரது மகன் சிபிக்கு சொல்லிகொடுப்பதுபோல சொல்லிகொடுத்தார்.சிபி என்ன செய்வானோ அதைபோல நான் ஒன்றும் புரியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் வீட்டிற்கு அடிக்கடி செல்வதின் பலனாக இணையம் நெருக்கமானது. ஆர்குட்டில் சில குழுமங்களில் இணைந்து அரட்டையடித்தோம், அரசியல் பேசினோம், சண்டை இட்டோம். இதனால் எனக்கு கிடைத்தது மிக நெருக்கமான நண்பர்கள் சிலர். அதில் முக்கியமானவரான தோழன் அலாவுதீன் [ஒட்டக்கூத்தன்] திருமணத்திற்கு மதுரைக்கு சென்றிருந்தபோது [ அன்று பிரியாணி சாப்பிட நானும் அசோக்கும் பட்ட பாடு இருக்கே அதை தனியாக எழுதனும்] எழுத்தாளரும் அன்புமிக்க தோழருமான பாமரன் அவர்களிடம் என் கவிதை தொகுப்பினை தந்தேன். [ கவிதை எழுத தெரியுமுன்னே கொண்டுவந்த தொகுப்பென்றாலும் பாமரன் அதற்கு உரிய தொகையை மறுத்தும் விடாது தந்தார்] அத்தோடு நானும் மறந்துவிட்டேன். அடுத்து சில நாட்கள் கழித்து மணிசெந்திலை சந்தித்தபோது பாமரனின் நண்பர் யுவன் பிரபாகரன் எனக்கென ஒரு வலைப்பூ உருவாக்கி அதில் என் தொகுப்பிலிருக்கும் 10 கவிதைகளை பதிந்துள்ளார் என சொல்லி அதனைதிறந்து காட்டியபோது என் கவிதைகளுக்கு மிக அழகிய புகைபடங்களை தேர்ந்தெடுத்து பதிந்திருந்தார். என் வலைப்பூ முகவரியை எனது ஆர்குட் புரபைலில் வைத்திருந்ததால் நிறைய நண்பர்கள் அங்கு வந்து போனார்கள். வெளிநாடுகளிலிருந்து பல நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து பேசியதும் ,தமிழகத்திலுள்ள நண்பர் என் கவிதைகளை தன் இதழில் வெளியிட அனுமதி கேட்டபிறகுதான் எனக்கு இணையத்தின் பரப்பு மெல்ல புரியலானது. எழுதும் கவிதைகளை ஆர்குட்டில் பதிந்து நண்பர்களின் விமர்சனத்தோடு வலைப்பூவில் பதிந்து வருகிறேன்.
கவிதை எழுதுபவர்கள் பற்றி பொதுவாக எப்போதும் சொல்லப்படும் ஒரு குற்றச்சாட்டு கவிதை எழுத அதிக நேரம் செலவழிக்கவேண்டிருக்காததாலே இவர்கள் எழுதுகிறார்கள் என. அதில் எனக்கு உடன்பாடு இல்லை . எனக்கான வடிவமாக நான் கவிதையை தேர்ந்தெடுக்க காரணம் எழுதுவதற்கான என பாடுபொருட்களே.. அதில் பெரும்பான்மையானவை குழந்தைமை சார்ந்தது என்பதால் அவை அதன் தன்மை குறையாமல் பதிய எனக்கு கவிதையே சரியென தோன்றியதே. பொதுவாக, கவிதை எழுதுவதற்கு குழந்தைமையின் மனநிலை வேண்டுமென்பார் கவிஞர் பிரேமிள். அந்த குழந்தைமையினை பற்றி எழுதுதல் என்பது மிக எளிதானதாகவும் அதே அளவு மிக சிரமமானததாகவும் இருந்து வருகிறது. முதலில் நான் முடிவுசெய்துகொண்டது எனது மொழிநடையை எளிமையானதாக தக்கவைத்துக்கொள்ளவேண்டுமென்பதே..[ எளிமை என்பது யாருக்கு ..எனத்தொடங்கி சில விளக்கங்களை இங்கு முழுவதும் பொருத்திபார்க்கதேவையில்லை என்று நினனக்கிறேன்] குழந்தைமையினை குழந்தைகளின் வழியே சொல்வது எனக்கு எளிதானதாக இருந்தது வாசகனுக்கும் ஈர்க்கிறதாகவும் அமைந்தது. குழந்தைகளை பற்றி எழுதுதல் என்பது அவர்களின் விளையாட்டுத்தனமான சில செய்கைகளை அப்படியே எழுதி நீங்கள் யாரும் பார்க்காதத்தை அல்லது பார்த்தும் எழுதாததை நான் பார்த்தோ/ எழுதியோ உள்ளேன் என்கிற அளவிலில்லாது குழந்தையின் செய்கையிலிருக்கும் அன்பின்/பாரபட்சமற்ற/ குரூரமற்ற/ தன்மைகளின் நீட்சியை பெரியவர்கள் தொலைத்ததை நினைவூட்ட, அடையாளம் காட்ட என என் பதிவுகள் உலவவேண்டுமென விருப்பபடுகிறேன். அந்த நினைவூட்டல்கள் மூலம் தொலைந்ததை கண்டடையவதுடன் , தங்களின் குழந்தைகளின் உலகை அதன் அளவில்/ அழகில்/ புரிதலற்ற சுதந்திரத்தில் இவர்கள் அனுமதிப்பார்கள் எனும் பேராவலையும் என் கவிதைகள் மறைமுகமக தாங்கிவருவதாக நான் உணர்கிறேன். குறிப்பாக குழந்தைகளுக்கான உலகினுடன் நாம் உறவுக்கொள்ள குறைந்தபட்சம் குழந்தைமை மனத்துடன் ஓர் உரையாடல் அவசியமாகிறது, அந்த உரையாடலின் முக்கியத்துவத்தையும், தொடக்கத்தையும் என்கவிதைகள் செய்வதாக நண்பரும் எழுத்தாளருமான அமானுஷ்யன் சொன்னார் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எதிர்பார்த்த முக்கிய கூறு நோக்கி தன் படைப்புலகம் செல்லுவது பற்றி எந்த படைப்பாளிதான் மகிழாது இருப்பார். இதில் வேறுகோணங்களில் விமர்சனங்களும் வந்தது. குழந்தைகளுக்கான விஷ்யங்கள் மிக அற்பமானதாக பெரியவர்களுக்கு தோன்றுவதால் உதாரணமாக இசை கவிதை ஒன்றில் '' பேருந்து கடக்கையில் கீழ் நிற்கும் சிறுவர்கள் கையசைக்கிறார்கள் பயணிக்கும் பெரியவர்கள் கைகட்டி இருப்பார்கள் தாங்கள் வளர்ந்ததை மனதில் கொண்டு என வரும். அதை போல குழந்தைகளின் செயலிருந்து நான் காட்டவிரும்பும் புற உலகையும், அதன் அடிநாதமாக இருக்கும் குழந்தைகளின் உலகினையும் சில பெரியவர்களாயிருக்கிற விமர்சன நண்பர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. சில பாடுபொருட்கள் அற்பமானவை.இவையெல்லாம் கவிதைக்கு தேவையா.. என்றெல்லாம் கேள்வி எழுந்தன. நான் அவர்களிடம் சொன்னதும் சிலரிடம் சொல்லாதது... என் பாடுபொருட்களை நான்/என்னை சந்திக்கும் குழந்தைகளே தருகின்றன. குழந்தைகளின் உலகினை நான் நெருங்க என் வீட்டு குடும்பச்சூழல் முதல் மட்டுமல்ல முக்கிய காரணியும் கூட.. கூட்டுக்குடும்பமான என் வீட்டில் நான் குழந்தைமையை தவறவிட்ட நாளிலிருந்து எங்கள் வீட்டில் ஏதோ ஒரு குழந்தை இந்நாள்வரை இருந்துவருகிறது. அண்ணன், அக்கா குழந்தைகள் என இப்போது 6 மாத என் அண்ணன் குழந்தை என தொடர்ந்து குழந்தைகளோடு தொடர்புகொள்ள உதவியுள்ளது என் வீடு. அடுத்து குழந்தைகளின் உலகினை நான் நெருங்குவதற்கான கதவுகளை திறந்துவிட்டவர்/விடுக்கிறவர் குழந்தைகள் நாடக கலைஞர் வேலு,,சரவணன் அவருடான நட்பே பல கவிதைகளுக்கு தொடக்கம். வேலு.சரவணனிடம் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில் ஏன் குழந்தைகள் பற்றியே எழுதுகிறீர்கள் குழந்தைகளுக்கானதாக எழுதலாமே என கேட்டார் .. இரண்டுக்கும் சிறியவித்தியாசம்தான் ஆனால் அது என்ன என்று புரியவில்லை என்றேன். குழந்தை வண்ணத்துப்பூச்சியை பிடித்துவிளையாடுகிறது என எழுதினால் அதுகுழந்தையைபற்றி.. அதே குழந்தை மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஏன் வண்ணத்துப்பூச்சியை பிடிக்கிறது என எழுதினால அது குழந்தைக்களுக்கானது' என்றார். எனக்கு புரிந்த மாதிரி இருக்கிறது என்றேன். சமீபத்தில் ஆனந்தவிகடவில் வெளிவந்த என் கவிதையை படித்துவிட்டு அழைத்தவர் இந்த கவிதைக்குள் குழந்தைக்கான கதை இருக்கு அதை கண்டுபிடித்து எழுது" என உரிமையுடன் சொன்னார். முடியுமெனத்தான் நினைக்கிறேன் குழந்தைக்களுக்கான எழுத்து..
பார்ப்போம் .
இருபுறமும் புத்தகங்களால் சூழ்ந்த தனது வீட்டிலிருக்கும் அறையிலிருந்த கணினியில்தான் நண்பரும் கவிஞருமான மணிசெந்தில் இணையத்தளம் பற்றி எனக்கு அறிமுகம் செய்தார். அதற்கு முன் அவர் ஆர்குட் ல் பல விவாதங்களில் கலந்துகொண்டு பலருக்கும் பரிச்சயமானவர். அன்றுதான் எனக்கான மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆர்குட் ல் இணைவது என அவரது மகன் சிபிக்கு சொல்லிகொடுப்பதுபோல சொல்லிகொடுத்தார்.சிபி என்ன செய்வானோ அதைபோல நான் ஒன்றும் புரியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் வீட்டிற்கு அடிக்கடி செல்வதின் பலனாக இணையம் நெருக்கமானது. ஆர்குட்டில் சில குழுமங்களில் இணைந்து அரட்டையடித்தோம், அரசியல் பேசினோம், சண்டை இட்டோம். இதனால் எனக்கு கிடைத்தது மிக நெருக்கமான நண்பர்கள் சிலர். அதில் முக்கியமானவரான தோழன் அலாவுதீன் [ஒட்டக்கூத்தன்] திருமணத்திற்கு மதுரைக்கு சென்றிருந்தபோது [ அன்று பிரியாணி சாப்பிட நானும் அசோக்கும் பட்ட பாடு இருக்கே அதை தனியாக எழுதனும்] எழுத்தாளரும் அன்புமிக்க தோழருமான பாமரன் அவர்களிடம் என் கவிதை தொகுப்பினை தந்தேன். [ கவிதை எழுத தெரியுமுன்னே கொண்டுவந்த தொகுப்பென்றாலும் பாமரன் அதற்கு உரிய தொகையை மறுத்தும் விடாது தந்தார்] அத்தோடு நானும் மறந்துவிட்டேன். அடுத்து சில நாட்கள் கழித்து மணிசெந்திலை சந்தித்தபோது பாமரனின் நண்பர் யுவன் பிரபாகரன் எனக்கென ஒரு வலைப்பூ உருவாக்கி அதில் என் தொகுப்பிலிருக்கும் 10 கவிதைகளை பதிந்துள்ளார் என சொல்லி அதனைதிறந்து காட்டியபோது என் கவிதைகளுக்கு மிக அழகிய புகைபடங்களை தேர்ந்தெடுத்து பதிந்திருந்தார்.
என் வலைப்பூ முகவரியை எனது ஆர்குட் புரபைலில் வைத்திருந்ததால் நிறைய நண்பர்கள் அங்கு வந்து போனார்கள். வெளிநாடுகளிலிருந்து பல நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து பேசியதும் ,தமிழகத்திலுள்ள நண்பர் என் கவிதைகளை தன் இதழில் வெளியிட அனுமதி கேட்டபிறகுதான் எனக்கு இணையத்தின் பரப்பு மெல்ல புரியலானது.
எழுதும் கவிதைகளை ஆர்குட்டில் பதிந்து நண்பர்களின் விமர்சனத்தோடு வலைப்பூவில் பதிந்து வருகிறேன்.
கவிதை எழுதுபவர்கள் பற்றி பொதுவாக எப்போதும் சொல்லப்படும் ஒரு குற்றச்சாட்டு கவிதை எழுத அதிக நேரம் செலவழிக்கவேண்டிருக்காததாலே இவர்கள் எழுதுகிறார்கள் என. அதில் எனக்கு உடன்பாடு இல்லை . எனக்கான வடிவமாக நான் கவிதையை தேர்ந்தெடுக்க காரணம் எழுதுவதற்கான என பாடுபொருட்களே.. அதில் பெரும்பான்மையானவை குழந்தைமை சார்ந்தது என்பதால் அவை அதன் தன்மை குறையாமல் பதிய எனக்கு கவிதையே சரியென தோன்றியதே.
பொதுவாக, கவிதை எழுதுவதற்கு குழந்தைமையின் மனநிலை வேண்டுமென்பார் கவிஞர் பிரேமிள். அந்த குழந்தைமையினை பற்றி எழுதுதல் என்பது மிக எளிதானதாகவும் அதே அளவு மிக சிரமமானததாகவும் இருந்து வருகிறது. முதலில் நான் முடிவுசெய்துகொண்டது எனது மொழிநடையை எளிமையானதாக தக்கவைத்துக்கொள்ளவேண்டுமென்பதே..[ எளிமை என்பது யாருக்கு ..எனத்தொடங்கி சில விளக்கங்களை இங்கு முழுவதும் பொருத்திபார்க்கதேவையில்லை என்று நினனக்கிறேன்] குழந்தைமையினை குழந்தைகளின் வழியே சொல்வது எனக்கு எளிதானதாக இருந்தது வாசகனுக்கும் ஈர்க்கிறதாகவும் அமைந்தது.
குழந்தைகளை பற்றி எழுதுதல் என்பது அவர்களின் விளையாட்டுத்தனமான சில செய்கைகளை அப்படியே எழுதி நீங்கள் யாரும் பார்க்காதத்தை அல்லது பார்த்தும் எழுதாததை நான் பார்த்தோ/ எழுதியோ உள்ளேன் என்கிற அளவிலில்லாது குழந்தையின் செய்கையிலிருக்கும் அன்பின்/பாரபட்சமற்ற/ குரூரமற்ற/ தன்மைகளின் நீட்சியை பெரியவர்கள் தொலைத்ததை நினைவூட்ட, அடையாளம் காட்ட என என் பதிவுகள் உலவவேண்டுமென விருப்பபடுகிறேன். அந்த நினைவூட்டல்கள் மூலம் தொலைந்ததை கண்டடையவதுடன் , தங்களின் குழந்தைகளின் உலகை அதன் அளவில்/ அழகில்/ புரிதலற்ற சுதந்திரத்தில் இவர்கள் அனுமதிப்பார்கள் எனும் பேராவலையும் என் கவிதைகள் மறைமுகமக தாங்கிவருவதாக நான் உணர்கிறேன். குறிப்பாக குழந்தைகளுக்கான உலகினுடன் நாம் உறவுக்கொள்ள குறைந்தபட்சம் குழந்தைமை மனத்துடன் ஓர் உரையாடல் அவசியமாகிறது,
அந்த உரையாடலின் முக்கியத்துவத்தையும், தொடக்கத்தையும் என்கவிதைகள் செய்வதாக நண்பரும் எழுத்தாளருமான அமானுஷ்யன் சொன்னார் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எதிர்பார்த்த முக்கிய கூறு நோக்கி தன் படைப்புலகம் செல்லுவது பற்றி எந்த படைப்பாளிதான் மகிழாது இருப்பார்.
இதில் வேறுகோணங்களில் விமர்சனங்களும் வந்தது. குழந்தைகளுக்கான விஷ்யங்கள் மிக அற்பமானதாக பெரியவர்களுக்கு தோன்றுவதால் உதாரணமாக இசை கவிதை ஒன்றில் '' பேருந்து கடக்கையில் கீழ் நிற்கும் சிறுவர்கள் கையசைக்கிறார்கள் பயணிக்கும் பெரியவர்கள் கைகட்டி இருப்பார்கள் தாங்கள் வளர்ந்ததை மனதில் கொண்டு என வரும். அதை போல குழந்தைகளின் செயலிருந்து நான் காட்டவிரும்பும் புற உலகையும், அதன் அடிநாதமாக இருக்கும் குழந்தைகளின் உலகினையும் சில பெரியவர்களாயிருக்கிற விமர்சன நண்பர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. சில பாடுபொருட்கள் அற்பமானவை.இவையெல்லாம் கவிதைக்கு தேவையா.. என்றெல்லாம் கேள்வி எழுந்தன. நான் அவர்களிடம் சொன்னதும் சிலரிடம் சொல்லாதது... என் பாடுபொருட்களை நான்/என்னை சந்திக்கும் குழந்தைகளே தருகின்றன.
குழந்தைகளின் உலகினை நான் நெருங்க என் வீட்டு குடும்பச்சூழல் முதல் மட்டுமல்ல முக்கிய காரணியும் கூட.. கூட்டுக்குடும்பமான என் வீட்டில் நான் குழந்தைமையை தவறவிட்ட நாளிலிருந்து எங்கள் வீட்டில் ஏதோ ஒரு குழந்தை இந்நாள்வரை இருந்துவருகிறது. அண்ணன், அக்கா குழந்தைகள் என இப்போது 6 மாத என் அண்ணன் குழந்தை என தொடர்ந்து குழந்தைகளோடு தொடர்புகொள்ள உதவியுள்ளது என் வீடு.
அடுத்து குழந்தைகளின் உலகினை நான் நெருங்குவதற்கான கதவுகளை திறந்துவிட்டவர்/விடுக்கிறவர் குழந்தைகள் நாடக கலைஞர் வேலு,,சரவணன் அவருடான நட்பே பல கவிதைகளுக்கு தொடக்கம். வேலு.சரவணனிடம் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில் ஏன் குழந்தைகள் பற்றியே எழுதுகிறீர்கள் குழந்தைகளுக்கானதாக எழுதலாமே என கேட்டார் .. இரண்டுக்கும் சிறியவித்தியாசம்தான் ஆனால் அது என்ன என்று புரியவில்லை என்றேன். குழந்தை வண்ணத்துப்பூச்சியை பிடித்துவிளையாடுகிறது என எழுதினால் அதுகுழந்தையைபற்றி.. அதே குழந்தை மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஏன் வண்ணத்துப்பூச்சியை பிடிக்கிறது என எழுதினால அது குழந்தைக்களுக்கானது' என்றார். எனக்கு புரிந்த மாதிரி இருக்கிறது என்றேன். சமீபத்தில் ஆனந்தவிகடவில் வெளிவந்த என் கவிதையை படித்துவிட்டு அழைத்தவர் இந்த கவிதைக்குள் குழந்தைக்கான கதை இருக்கு அதை கண்டுபிடித்து எழுது" என உரிமையுடன் சொன்னார். முடியுமெனத்தான் நினைக்கிறேன் குழந்தைக்களுக்கான எழுத்து..
பார்ப்போம் .
Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 8:34 AM 6 COMMENTS
links to this post
Saturday, September 5, 2009
சதுரம் + முக்கோணம் = ?
சதுரமான காகிதத்தை
எடுத்துகொள்
இரண்டாக மடித்து
பின் குறுஞ்சதுரமாக்கும்
இரண்டாம் மடிப்பையும் மடி
தொடக்கசதுரத்தின்
நான்கு முனைகள்
இப்போது ஒரே முனையில்
அவற்றில் ஒன்றை
முக்கோணமாக்கும்
விதமாக மடி
மீதமிருக்கும் மூன்றை
அதன் மறுபுறம் மடித்து
முக்கோணமாக்கு
இரண்டு
முக்கோணங்களிடையே
விரல்கள் நுழைத்து
இடைவெளியை
விரித்துகொண்டே போகையில்
இணையும் முனைகளை
விட்டுவிட்டு
மற்ற முனைகளை இழு.
இப்போது உன் கையில்
ஓர் அழகிய கப்பல்.
இக்கப்பலை மிதக்கவிட
தண்ணீர் கேட்டால் நீ அப்பா
மழை கேட்டால் நீ மகள்
[இந்த வார ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது}
Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 12:12 AM 2 COMMENTS
links to this post
Tuesday, September 1, 2009
வடிவமற்ற சுதந்திரம்
தமிழ் கவிதைசூழலில் கவிதையின் பாடுபொருளை விட அதன் வடிவம் பற்றியே இங்கு சிலாகித்தும், விமர்சித்தும் வரப்பட்டிருக்கிறது. ஒரு கவிஞரின் அவருக்கான தனித்த கவிதை வடிவத்தை கொண்டிருப்பதே அவரின் முதிர்ச்சி எனவும் கருதப்பட்டுவருகிறது.
இந்நிலையில் "மனத்தடி நீர்" கவிதை தொகுப்பு மூலம் நம்மஒ சந்திக்கும் கவிஞர்.தெ.வெற்றிச்செல்வன் தனக்கான எந்த தனித்த வடிவத்தோடும் வரவில்லை. அவரின் கவிதைகளின் பாடுபொருட்களை தாங்கியபடியே அவரின் வடிவம் தொடர்கிறது. எந்தவொரு வடிவத்தினுள்ளும் நுழையாத அவரின் கவிதை சுதந்திரமாக சுற்றுகிறது. ஒரு குழந்தையின் சிர்ப்பைப்போல. எப்போது சிரிக்க தொடங்கி,முடிக்கும் எனத்தெரியாமல், பலமாய் சிரித்தால் பல் விழுந்த இடம் பொக்கையாக தெரியுமே என்கிற நாகரீக பூச்சு இல்லாமல், சிரிக்கும் இடம் உதடுகள் மட்டுமல்ல கண்களும்தான்... என சிரிக்கும் குழந்தையைபோல வெற்றிச்செல்வனின் கவிதை மிக இயல்பாக நிஜமாக மனிதம் எச்சில் தெறிக்க சிரிக்கிறது
Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 12:52 AM 0 COMMENTS
links to this post
Thursday, August 27, 2009
ஆயுதமாகும் வண்ணக்கரைசல்
கருகும் உடலின் வாடையை
இன்ஹேலரில் அடைத்து சுவாசிக்கும்
அரசனை உங்களுக்கு தெரிந்திருக்ககூடும்
பால்நிற உடைமேல்
குருதியை மாலைப்போல அணிந்திருக்குமவன்
சித்திர விரும்பியும் கூட
மஞ்சள்கருப்பு நிறங்களை
வரைந்து கொன்றோ
கொன்று வரைந்தோ கொண்டிருந்தவனிடம்
யாரோ சொன்னார்களாம்
வண்ணங்களின் கரைசலை
குடிக்கவைத்துவிட்டால் வரையாமலே
உடலில் கோடுகள் தோன்றுமென
மிச்சம்மிகுந்து
பட்டியில் அடைக்கப்பட்டஇருப்பவர்களுக்கு
இறக்குமதி செய்யப்பட்ட வண்ணக்கரைசலை
நேரிடையாக
இரைப்பையில் புகட்ட
முளைக்களானது
கோடுகளோடு வாலும்
வழிந்தோடிய வண்ணக்கரைசலை
கூரிய ஆயுதமாக்கினர் சிறார்கள்
பதறியோடிய அரசனை நிறுத்தி
புத்தன் சொன்னான்
"வென்றுவிடுதலென்பது
வீழ்த்திவிடுவதாகாது"
Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 11:16 PM 4 COMMENTS
links to this post
Friday, August 7, 2009
பறை தொடுதல்
மானுடத்தின் முதல் இசைகருவி பறைதான் என்பதிலிருந்து
"தூங்கும் புலியை பறை கொண்டெழுப்புவோம் தூயதமிழரை தமிழ் கொண்டெழுப்புவோம்"
எனும் பாவேந்தன் வரிகள் உள்ளிட்ட பறை குறித்த பல குறிப்புகள் படித்தும், பல கலை இரவுகளில் பறையாட்டம் நிகழ்வுகளை பார்த்துகேட்டு அந்த சூழல் மட்டுமே நினைவிலிருக்க மற்றவை எல்லாம் மறக்கச்செய்யும் அனுபவங்களை பறை மூலம் பெற்றிருந்தாலும் அதனை தொட்டுப்பார்த்தல் என்பது எனக்கு அலாதியானது. சென்ற வாரம் திருச்சியில் ஒரு நிகழ்ச்சி நடந்த அறையில் ஒரு பறை இருக்க நானும் கவிஞர் கண்ணகனும் வாஞ்சையோடு தொட்டுபார்த்தோம். பறையை தொடுதல் என்பது விவரிக்கவியலாத அனுபவமாக என்னுள் எப்பவுமே இருக்கத்தான் செய்கிறது.
நேற்று முன்னிரவில் தோழர் மணிசெந்தில் அழைத்து சென்ற அந்த இடம் முக்கியமானது. பறை இசைத்தலை கற்றுக்கொள்ள சில நண்பர்கள் தொடங்கும் முதல் வகுப்பு அது. இசைத்தலை கற்றுக்கொடுக்க வந்த அந்த கலைஞர்கள் மிகுந்த பக்தியோடு ஒவ்வொருவருக்கு குங்குமம் இட்டு வாழ்த்தி வகுப்பை தொடங்கினர் ஒர் நீளமான மூங்கிலை இடுப்பளவு நீளத்தில் [ 3 அடி அளவில்] வெட்டி சில துண்டுகளாகவும் இரண்டு பறையும் ஒரு மேளமும் இருந்தன. பூஜைக்கு பிறகு அதில் ஒரு கலைஞர் பறையொன்றை நண்பருக்கு தந்து இரண்டு குச்சிகளை எப்படி வைத்துக்கொள்வதென சொல்லிகொடுத்தார். வலதுகை குச்சி அவருக்கு வசப்பட்டது இடதுகை குச்சி முரண்டுபிடித்தது. அவர் இசைப்பதை கேட்டு அதை வாசிக்க சொல்லி மிக இலகுவான ஒன்றை வாசிக்க அதுவே எங்களுக்கு மிக கடினமானதாக இருந்தது. பிறகு அந்த இசையை சொற்குறிப்பாக சொல்லி " ச்சனச்செ" அதனை சொல்லிக்கொண்டே வாசிக்கபழக்கினார். அந்த நண்பருக்கு இசைப்பதில் இரண்டு விஷயங்கள் தொந்தரவாக இருந்தது ஒன்று இடக்கை குச்சி அவர் சொன்னதை கேட்க மாட்டேன் என்றது அடுத்தது குறும்புகார குழந்தை போல பறை அவர் இடிப்பில் இருக்காமல் இறங்கச்செய்தது .
இதற்குள் மணிசெந்தில் மூங்கில் துண்டில் அந்த இசைகுறிப்பை இசைக்க பழகி ஆசியரிடம் முத்தத்தையும் பெறவே பறை மணிசெந்தில் கைகளுக்கு மாறியது. மூங்கில் குச்சில் கையடக்கமாக அமைந்த அவருக்கு பறையில் அடம்பிடித்தது. சிறிது நேரத்தில் கிட்டத்தட்ட அதை இசைக்க பழகினார் மறுபுறம் தோழர் சுடர் தனக்கு தரப்பட்ட பறையில் அந்த இசைக்குறிப்பை மிக குறுகிய நேரத்தில் வாசித்து தொடர்ந்து வாசிக்கலானார். எந்த விசயத்திலும் உடனடியாக தன்னை பொறுத்திக்கொள்ளும் தன்மை இல்லாத நான் சற்று தயக்கதோடே மூங்கில் குச்சியில் இசை பழக தொடங்க அந்த ஆசிரிய கலைஞர் இரண்டு கைகளிலிருந்த குச்சிகளை பிடித்து [கிட்டத்தட்ட குழந்தைக்கு ''அ'' எழுத கற்றுத்தருதலைப்போல கற்றுத்தர ,வசபட்டதாக நான் கருதி பறையை வாங்கிகொண்டேன் பிறகுதான் தெரிந்தது இசைவசப்பட்டது என் மூளையில்தானேயன்றி கரங்களில் இல்லை என்பதை. மேலும் என்னதான் குழந்தைமை கவிதைகள் எழுதினாலும் என்னிடமும் குறும்புக்கார குழந்தையாகத்தனிருந்தது பறை.மூத்த கலைஞர் என்னிடம் வந்து 'ச்சனச்செ' எங்கே சொல்லிகிட்ட அடி என சொல்ல சொல்லிக்கொண்டே அடித்தேன் தூரத்தில் ஒளியை பார்த்த மகிழ்வாக அந்த இசைகுறிப்பை தொட்டுவிடலாமென நம்பிக்கை பிறந்தது. இசைக்க நெருங்கியது ஒளி. முழுவதும் நெருங்கவில்லை அதற்கு மழை குறுக்கிட வகுப்பு முடிந்தது அந்த வகுப்பை தொடரமுயுமா என தெரியவில்லை.இது நாள் வரை பறை தொடுதல் என்பது ஒருபோது இசைக்க என்று இருந்ததில்லை ஆனால் நேற்று இசைக்க என தொடும்போது மெலிதாக உடல் நடுங்கியது அது ஆனந்தத்தில்தான். கடக்க முடியாத நிலத்தை தொட்டாவது பார்த்த திருப்தியில் அறை திரும்பினேன்.
பறை எனும் இதழைதோழர் பொதியவெற்பன் நடத்தியதாக அறிவேன், அவரை அடுத்தமுறை சந்திக்கும்போது அந்த இதழ்கள் படிக்க கிடைக்குமா எனகேட்டக வேண்டும்
Posted by விஷ்ணுபுரம் சரவணன் @ 7:46 AM 1 COMMENTS
links to this post